கட்டுரை
குஜராத்தி இலக்கிய ஆசிரியர்களில் ஒருவரான கிருஷ்ணலால் ஸ்ரீதரணி காந்தி இறந்த போது ஆற்றிய வானொலி உரையில் அவர் சாட்சியாக இருந்த ஒரு நிகழ்வை பற்றி சொல்கிறார். தண்டி யாத்திரை சென்றபோது காரதி எனும் சிறிய கிராமத்தில் தங்குகிறார்கள். ஒருநாள் காலை காந்திஜியை நோக்கி கிராமத்தினர் ஒரு குழுவாக பெண்கள் முன் நடக்க வெற்றி முழக்கத்துடன் ஊர்வலம் வந்தார்கள். பின்னால் வந்து கொண்டிருந்த இசை கலைஞர்கள் பீடு நடையின் தாளகதியை கட்டுப்படுத்தினார்கள். ஆண்கள் பழங்கள், மலர்கள் மற்றும் பண முடிப்புகளை தாங்கி வந்தார்கள். காந்திஜியை அவர்கள் பக்தியுடன் அணுகி மரியாதையுடன் அவருடைய காலடியில் காணிக்கைகளை வைத்தார்கள்.
ஜெயமோகன் தொகுப்புரை
அன்புள்ள புல்புல்
₹180.00
“செயலே முக்கியம், அதன் பலன்கள் அல்ல. நீங்கள் சரியானவற்றை செய்ய வேண்டும். உங்கள் சக்திக்கு உட்பட்ட, உங்கள் காலத்தில் அதற்கு எந்த பலனும் கிடைக்காமல் போகலாம். ஆனால் அதன் பொருள் நீங்கள் சரியானவற்றை செய்யாமல் இருப்பது என்பதல்ல. உங்கள் செயலால் என்ன விளையும் என்பதை நீங்கள் ஒருபோதும் அறிய முடியாமல் கூட ஆகலாம். ஆனால் நீங்கள் எதையுமே செய்யவில்லை என்றால் எந்த பலனும் கிடைக்காது.”- மகாத்மா காந்தி
“செயலே முக்கியம், அதன் பலன்கள் அல்ல. நீங்கள் சரியானவற்றை செய்ய வேண்டும். உங்கள் சக்திக்கு உட்பட்ட, உங்கள் காலத்தில் அதற்கு எந்த பலனும் கிடைக்காமல் போகலாம். ஆனால் அதன் பொருள் நீங்கள் சரியானவற்றை செய்யாமல் இருப்பது என்பதல்ல. உங்கள் செயலால் என்ன விளையும் என்பதை நீங்கள் ஒருபோதும் அறிய முடியாமல் கூட ஆகலாம். ஆனால் நீங்கள் எதையுமே செய்யவில்லை என்றால் எந்த பலனும் கிடைக்காது.”- மகாத்மா காந்தி
ச.அன்பரசு –
அன்புள்ள புல் புல் வித்தியாசமான தலைப்பு. நூலில் காந்தியின் நகைச்சுவை குணத்தை வாசகர்களிடம் பதிவு செய்யும் பகுதியும் கூட. நூலில் மொத்தம் பதினெட்டு கட்டுரைகள் உள்ளன.இவை ஒவ்வொன்றும் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்தபின் இங்கு வாழ்ந்த 33 ஆண்டுகளில் அவர் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் அவரின் பார்வையையும், அவரின் கூடவே இருந்த பத்திரிகையாளர்களின் கருத்தையும் பதிவு செய்கிறது.
நூலின் சிறப்பு, அகிம்சை போராட்டத்தை காலத்திற்ப மாற்றும் தேவை, அப்படி மாற்றி வென்ற நாடுகள், அதில் தோற்றுப்போன நாடுகளின் பிரச்னை, அகிம்சை போராட்டம் இந்தியாவில் வெல்வதற்கு அன்றைய காலத்தில் உதவியாக நின்ற விஷயங்கள் என்ற சம்ரசமற்ற பார்வையை முக்கியமாக கூறலாம்.
காந்தி நமக்கு ஏன் குற்றவுணர்வை தூண்டுகிறார்? அவரை சராசரியாக்க பலரும் துடிப்பது ஏன் என்ற சுனில் கிருஷ்ணனின் பதில் அபாரமானது. ஏனெனில் அதற்கு சிலமணிநேரங்கள் முன்பு ்என் நண்பர் காந்தியின் நிர்வாணமாக பெண்களின் நடுவே படுத்துறங்கும் சோதனையை ஏளனத்துடன் சொல்லிவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் சென்றார். நல்லதை விட அல்லதை நம் மனம் எளிதில் ஏற்பதை காந்தியின் பக்குவதில் என்னால் பார்க்கமுடியவில்லை. இதனால்தான் காந்தி ரூபாய் நோட்டில் மட்டுமல்ல காலம்தோறும் கண்ணில் தென்ப்டும் காந்தியர்களின் வழியாக நம் மனதில் அறவுணர்வை ஊட்டிக்கொண்டே இருக்கிறார்.
ஷீன் ஷார்ப், மில்லி போலக், அசப் அலி, நேரு பலரும் காந்தியைப் பற்றிய தங்களது அனுபவத்தை தங்கள் கைப்பட எழுதியுள்ளனர். இதனை அந்த சூழலை மனதில் வைத்து படிப்பது முக்கியம். மற்றபடி காந்தியை புனிதர், மகாத்மா என அணுகாமல் விமர்சனநோக்கில் அணுகி ஆராயும் தன்மையில் சுனில் கிருஷ்ணனின் இந்த நூல் பாரட்டத்தக்கது. விவாதிப்பதற்கான களத்தை தனது வலைதளம் மூலம் உருவாக்கியவர் , நூல் மூலம் பரந்துபட்ட தளத்திற்கு செல்ல விழைவதையும் வரவேற்கலாம்.
– ச.அன்பரசு
நன்றி: இரா.முருகானந்தம், தாராபுரம்